தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சமீப காலமாக இளம் முன்னணி இயக்குனர்கள் இங்குள்ள முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கும்போது மற்ற மொழிகளில் இருக்கும் பிரபல முன்னணி நட்சத்திரங்களை அழைத்து வந்து சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கும் புது ட்ரெண்டிங்கை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் ஆகியோரை அழைத்து வந்து ரஜினியுடன் நடிக்க வைத்தார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். அந்தவகையில் தற்போது கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து பல கலர்புல்லான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அது மட்டுமல்ல மறைந்த நடிகர் விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் மோகன்லால் ஒரு முக்கிய சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. காரணம் சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் மோகன்லாலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படி திடீரென அவர் இந்த புகைப்படத்தை வெளியிடுவதற்கு காரணம் இந்த படத்தில் மோகன்லால் நிச்சயமாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பதால் தான் என ரசிகர்களாக தங்கள் யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். படம் வெளியாவதற்கு முன்பே சஸ்பென்ஸ் உடையும் என எதிர்பார்க்கலாம்.