ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கேரள திரையுலகில் நடிகைகள் பலர் பலாத்காரம் பிரச்னைகளால் பெரும் சிரமத்திற்குள்ளதானதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மல்லுவுட் நடிகர்கள், இயக்குனர்கள் கலங்கி நிற்கின்றனர். புகார்கள் தொடர்பாக சில வழக்குகளும் பதியப்பட்டு விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த கேரளாவில் பல மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் சர்மிளா என்ற நடிகை பழைய சம்பவத்தை புது குண்டாக தூக்கி போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: 1997ல் ‛அர்ஜூனாவும் அஞ்சு புள்ளைகளும்' என்ற திரைப்படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. இதற்கென அமைத்திருந்த ஒரு செட்டில் நானும் அமர்ந்திருந்தேன். அப்போது இப்பட தயாரிப்பாளர் எம்.பி.மோகனன் மற்றும் அவரது நண்பர்கள் என்னை சூழ்ந்து பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். எனது குடும்ப உறுப்பினர்கள் சிலர் உதவியால் தப்பினேன்.
ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோது மோகனன் மற்றும் அவரது நண்பர்கள் என்னை பலாத்காரம் செய்ய வந்தனர். ஓட்டல் ஊழியர் ஒருவரும் சேர்ந்து கொண்டார். ' நோ ' என்று கதறியபடி வெளியே ஓடினேன். ஒரு ஆட்டோ டிரைவர் உதவியால் தப்பி வீட்டிற்கு சென்றேன். நான் தப்பித்து விட்டேன் ஆனால் ஏழை நடிகைகள் பலர் இது போன்ற தொல்லையில் இருந்து தப்புவது பெரும் சிரமம். வெளியே சொன்னால் அவமானம், எனது குடும்பத்தினருக்கு பாதிப்பு வரும் என்று அப்போது சொல்லவில்லை.
அந்த ' அட்ஜஸ்மென்ட் '
இது போல் மற்றொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதாவது ‛பரினயம்' என்ற திரைப்பட ஷூட்டிங்கின் போது இயக்குனர் ஹரிஹரன், நடிகர் விஷ்ணு என்பவர் மூலம் சர்மிளா அந்த 'அட்ஜஸ்மென்ட் ' பண்ணுவாரான்னு கேட்டார். நான் ‛நோ' சொன்னேன். உடனே படப்பிடிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டேன். பெண்கள் பணியாற்ற முடியாத நிலை கேரள திரையுலகில் உள்ளது. இது போல் 28 பேர் வரை ' அந்த ' முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு நடிகை சர்மிளா கூறியுள்ளார்.