தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் 2008ம் ஆண்டு முதல் பலத்த வரவேற்புடன் நடந்து வருகிறது. அதன் பின் கடந்த சில வருடங்களாக பல மாநிலங்களுக்குள் இது போன்ற கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் தமிழ்நாடு பிரிமியர் லீக் என்ற பெயரில் 2016ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
அது போலவே, கேரளாவில் கேரள கிரிக்கெட் சங்கம் சார்பாக 'கேரளா கிரிக்கெட் போட்டிகள்' இந்த ஆண்டு முதல் நடக்க ஆரம்பித்துள்ளன. திருவனந்தபுரம் ராயல்ஸ், திருச்சூர் டைட்டன்ஸ், கொச்சி ப்ளூ டைகர்ஸ், கொல்லம் சைலர்ஸ், காலிகட் குளோப் ஸ்டார்ஸ், ஆலப்புழை ரிப்பிள்ஸ் என ஆறு அணிகள் அதில் கலந்து கொள்கின்றன. செப்டம்பர் 2ம் தேதி முதல் 18ம் தேதி வரை இப்போட்டிகள் நடக்க உள்ளன. நடிகர் மோகன்லால் இந்த போட்டிக்கான பிராண்ட் அம்பாசிடர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் திருவனந்தபுரம் ராயல்ஸ் அணியின் ஓனர்களில் ஒருவராக உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இது குறித்து, “கேரளா கிரிக்கெட் சங்கம் நடத்தும் கேரளா கிரிக்கெட் லீக்கின் திருவனந்தபுரம் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளராக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. எனது குரு பிரியதர்ஷன் சாருடன் எனது சினிமா பயணத்தைத் தொடங்கினேன். இப்போது அவருடன் இணைந்து இந்த புதிய முயற்சியில் ஈடுபடுவது நம்ப முடியாததாக இருக்கிறது. இதற்கு உங்களது அன்பும் ஆதரவும் தேவை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் திருவனந்தபுரம் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளதால் தனது கிரிக்கெட் அணி பயணத்தையும் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார் கீர்த்தி.