ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு மலையாள சினிமாவில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. முகேஷ், இடைவேள பாபு, ஜெயசூர்யா, சித்திக் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் பிரபலமான நடிகரான ‛பிரேமம்' புகழ் நிவின் பாலி மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
வாய்ப்பு தருவதாக சொல்லி நிவின் பாலி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி பெண் ஒருவர் எர்ணாகுளம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.