ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த மோகன் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார், அவருக்கு வயது 71. கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றியவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ்.
1986ல் மோகன் நதியா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான “பூக்களைப் பறிக்காதீர்கள்” படம் அவருடைய தயாரிப்பில் வெளிவந்த முதல் படம். தரங்கை வி.சண்முகம் என்பவருடன் இணைந்து படங்களைத் தயாரித்து வந்தார். தொடர்ந்து, பிரபு நடித்த 'என் தங்கச்சி படிச்சவ', சத்யராஜ் நடித்த 'வேலை கிடைச்சிடுச்சி', அருண்பாண்டியன் நடித்த 'கோட்டை வாசல்', விஜய் நடித்த 'கண்ணுக்குள் நிலவு', அஜித் நடித்த 'ஆழ்வார்', சூர்யா நடித்த 'வேல்' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக விக்ரம் நடித்து வெளிவந்த 'தெய்வத் திருமகள்' படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
“நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், கோட்டை வாசல், புதல்வன், பிள்ளைக்காக, பாட்டுப்பாடவா, அரண்மனை காவலன், பதவிப்பிரமாணம், மகாநதி, பட்டியல்” உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு சென்னை, திருவொற்றியூரில் நடைபெற உள்ளது.