தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வேட்டையன்' . அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். போலி என்கவுன்டர் தொடர்பான கதையில் இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி போலீசாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மற்ற பணிகள் நடக்கின்றன.
இப்படம் வருகின்ற அக்டோபர் 10ந் தேதி அன்று திரைக்கு வருவதை யொட்டி இதன் டப்பிங் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ரஜினி டப்பிங் ஸ்டுடியோவில் வசனம் பேசும் வீடியோவை வெளியிட்டனர். வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிக்களுக்காக கூலி படப்பிடிப்பில் இருந்து 5 நாட்கள் இடைவெளி விட்டு வந்துள்ளார் ரஜினி.