தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். இருந்தாலும் அவர் காப்பியடிக்கிறார் என்று அடிக்கடி ஒரு சர்ச்சை கிளம்பும். அவரது இசையில், ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' பாடல் நேற்று மாலை வெளியானது. அனிருத் இசையமைத்து வரும் தெலுங்குப் படமான 'தேவரா' படத்தின் 'தாவூதி' படப் பாடல் போலவே அந்தப் பாடல் உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் 'டிரோல்' செய்து வருகிறார்கள்.
ஏற்கெனவே 'தேவரா' படத்தின் முதல் சிங்கிளான 'பியர்' பாடல் 'லியோ' படத்தின் 'படாஸ்' பாடலின் மறு உருவாக்கமாகவும், 'சுட்டாமலே' பாடல், சிங்கள ஆல்பமான 'மணிக்கே மஹே ஹித்தே' பாடலின் காப்பி என்றும் சர்ச்சை கிளம்பியது.
நேற்று வெளியான 'மனசிலாயோ' பாடல் கூட மலையாளப் படமான 'அஜகஜாந்தரம்' படத்தில் இடம் பெற்ற 'ஒல்லுல்லெரு' என்ற பாடலின் காப்பியாக உள்ளது என்று புதிய சர்ச்சை உருவாகி உள்ளது. இந்தப் பாடல் யு டியூப் தளத்தில் 128 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ரஜினி படத்திற்காக உருவான பாடலை ஜூனியர் என்டிஆர் படப் பாடலுக்காக அதே டியுனில், அதுவும் காப்பி டியூனில் போட்டது சரியா… என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.