இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். இருந்தாலும் அவர் காப்பியடிக்கிறார் என்று அடிக்கடி ஒரு சர்ச்சை கிளம்பும். அவரது இசையில், ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' பாடல் நேற்று மாலை வெளியானது. அனிருத் இசையமைத்து வரும் தெலுங்குப் படமான 'தேவரா' படத்தின் 'தாவூதி' படப் பாடல் போலவே அந்தப் பாடல் உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் 'டிரோல்' செய்து வருகிறார்கள்.
ஏற்கெனவே 'தேவரா' படத்தின் முதல் சிங்கிளான 'பியர்' பாடல் 'லியோ' படத்தின் 'படாஸ்' பாடலின் மறு உருவாக்கமாகவும், 'சுட்டாமலே' பாடல், சிங்கள ஆல்பமான 'மணிக்கே மஹே ஹித்தே' பாடலின் காப்பி என்றும் சர்ச்சை கிளம்பியது.
நேற்று வெளியான 'மனசிலாயோ' பாடல் கூட மலையாளப் படமான 'அஜகஜாந்தரம்' படத்தில் இடம் பெற்ற 'ஒல்லுல்லெரு' என்ற பாடலின் காப்பியாக உள்ளது என்று புதிய சர்ச்சை உருவாகி உள்ளது. இந்தப் பாடல் யு டியூப் தளத்தில் 128 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ரஜினி படத்திற்காக உருவான பாடலை ஜூனியர் என்டிஆர் படப் பாடலுக்காக அதே டியுனில், அதுவும் காப்பி டியூனில் போட்டது சரியா… என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.