இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஜெய்பீம் படத்தை அடுத்து தற்போது ரஜினி நடிப்பில் வேட்டையன் படத்தை இயக்கி இருக்கிறார் ஞானவேல். அக்டோபர் 10ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் நிலையில், நேற்று இப்படத்தின் மனசிலாயோ என்ற முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. ஜெய்பீம் படத்தைப் போலவே வேட்டையன் படத்தையும் உண்மை கதை அடிப்படையில் இயக்கி உள்ள ஞானவேல், இப்படம் தமிழகத்தில் நடந்த சில என்கவுண்டர் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருப்பதாக கூறுகிறார்.
இப்படத்திற்கு பிறகு மறைந்த சரவண பவன் ராஜகோபால் மற்றும் ஜீவ ஜோதி இடையே நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் தனது அடுத்த படத்தை இயக்க போகிறாராம். குறிப்பாக, அவர்களுக்கிடையே நடந்த பிரச்னை மற்றும் ஜீவஜோதி நடத்திய சட்ட போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கப் போகிறாராம் ஞானவேல். ஹிந்தியில் உருவாகும் இந்த படத்திற்கு தோசா கிங் என்று அவர் தலைப்பு வைத்திருக்கிறார் .