ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை மஞ்சு வாரியர், அதையடுத்து அஜித்துடன் துணிவு படத்தில் நடித்தார். தற்போது ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து மிஸ்டர் எக்ஸ் என்று படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், வேட்டையன் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கூறியிருக்கிறார்.
அதில், இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறேன். என்னுடைய கேரக்டரின் பெயர் தாரா. ரஜினியின் மனைவி வேடம் என்றாலும் இந்த வேடத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் உள்ளன. அதனால் என்னுடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் . ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியதும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் வேட்டையன் படத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் நான் நடித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மஞ்சு வாரியர்.
போலீஸ் வேடத்தில் ரஜினி நடித்திருக்கும் இந்த படம் தமிழகத்தில் நடைபெற்ற சில என்கவுண்டர் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் ரஜினி - மஞ்சுவாரியர் ஆடி, பாடிய மனசிலாயோ என்ற பாடல் வெளியானது. இப்படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.