ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் நடிப்பது குறித்து கன்னட நடிகர் உபேந்திரா கூறுகையில், கூலி படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை சந்தித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதை சொன்னார். அப்போது அவரிடத்தில், ரஜினி சார் வரும் காட்சிகளில் அவருடன் நானும் இருக்க வேண்டும். அது ஒன்று எனக்கு போதும். அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. ரஜினி என்ற ஒரே ஒரு பெயருக்காக மட்டுமே இந்த படத்தில் நான் நடிக்கிறேன். அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான். மற்றபடி பணத்துக்காக எல்லாம் நடிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் உபேந்திரா.