தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை அக்னினேனி நாகேஸ்வரராவ். அவரது மகன் நாகார்ஜூனா, பேரன்கள் அகில், நாக சைதன்யா இப்போது நடித்து வருகிறார்கள். தற்போது அவரது நூற்றாண்டு தொடங்கி உள்ளது. இதை முன்னிட்டு இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டர் செயின் நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது. பிலிம் ஹெரிட்டேஜ் நிறுவனத்துடன் இணைந்து இதனை நடத்துகிறது.
வருகிற செப்டம்பர் 20 முதல் 22 வரை நடைபெறும், இந்த விழாவில் நாகேஸ்வரராவின் புகழ்பெற்ற வெற்றிப் படங்களை இந்தியா முழுவதும் உள்ள தங்கள் தியேட்டரில் திரையிடுகிறது. இந்த விழாவில் தேவதாசு, மாயாபஜார், பார்யா பார்த்தலு, குண்டம்மா கதை, டாக்டர் சக்கரவர்த்தி, சுடிகுண்டலு, பிரேமாபிஷேகம், பிரேம் நகர் மற்றும் மனம்க் உள்ளிட்ட பல படங்கள் பெரிய திரையில் திரையிடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட 31 நகரங்களில் இந்த திரையிடல் நடக்கிறது.