ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது காதலியான நடிகை பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தொடர்ந்து ஆபாச செய்திகள் அனுப்பி டார்ச்சர் செய்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் இருக்கும்போது தனது வழக்கறிஞர் மூலமாக பல சலுகைகள் வேண்டும் என அவர் கேட்டதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஆனால் அதே சமயம் மறைமுகமாக அவருக்கு சிறையில் அனைத்து வித வசதிகளும் கிடைத்தன. அது குறித்த வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் பெல்லாரியில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார்.
அவர் இங்கே இருந்த சமயத்தில் அவருக்கு உதவியாக செயல்பட்டவர் வில்சன் கார்டன் நாகா என்கிற கேங்ஸ்டர் தான். அதனால் அந்த பகுதியில் எப்போதும் போலீசார் பெரிய அளவில் சோதனை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தற்போது கர்நாடக போலீசார் தர்ஷன் இருந்த அந்த சிறைப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட போது அங்கே 15 மொபைல்கள், 7 எலக்ட்ரிக் அடுப்புகள், 5 கத்திகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அது மட்டுமல்ல ஆயிரக்கணக்கில் பணமும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களும் சிக்கின. இவையெல்லாம் தர்ஷன் அங்கிருந்த போது அவருக்காக கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது.