வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'தக்லைப்' படத்தை அடுத்து ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பு அறிவு என்ற இரட்டையர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் கமல்ஹாசன். அவரது 237வது படமான இப்படம் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகிறது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட போதும், 'தக்லைப்' படத்தின் தோல்வி காரணமாக ஸ்கிரிப்டில் சில மாற்றங்களை செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கமல் 237வது படத்தில் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே தமிழில், சிவகார்த்திகேயனுடன் ஹீரோ என்ற படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன், தற்போது ரவி மோகனுடன் 'ஜீனி' என்ற படத்தில் நடித்துள்ளார்.