ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'தக்லைப்' படத்தை அடுத்து ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பு அறிவு என்ற இரட்டையர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் கமல்ஹாசன். அவரது 237வது படமான இப்படம் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகிறது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட போதும், 'தக்லைப்' படத்தின் தோல்வி காரணமாக ஸ்கிரிப்டில் சில மாற்றங்களை செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கமல் 237வது படத்தில் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே தமிழில், சிவகார்த்திகேயனுடன் ஹீரோ என்ற படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன், தற்போது ரவி மோகனுடன் 'ஜீனி' என்ற படத்தில் நடித்துள்ளார்.