தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் சினிமாவில் 'தும்பா' என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன். அதன் பிறகு 'கண்ணகி' என்ற படத்தில் நடித்தவர், 'ப்ளூ ஸ்டார்' படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து அந்த படத்தில் நடித்த போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு அப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது கணவர் அசோக் செல்வன் பற்றி கூறுகையில், ''மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்ல மனதை கொண்டவர். சொந்த வாழ்க்கையோ, சினிமா துறையோ, எதுவாக இருந்தாலும் உண்மையாக இருப்பார். மன உறுதியுடன் செயல்படுவார். அதோடு வீட்டில் இருக்கும் போது கிச்சனுக்குள்ளும் புகுந்து விடுவார். சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது என நான் செய்யும் அனைத்து வேலைகளையும் அவரும் எடுத்துக் கொண்டு செய்வார். அந்த அளவுக்கு பெண்களை மதிக்கக்கூடிய ஒரு நல்ல மனம் கொண்டவர் அசோக் செல்வன்,'' என்று தனது கணவரை பெருமையாக கூறியுள்ளார் கீர்த்தி பாண்டியன்.