ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ், தெலுங்கு திரையுலகத்தில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமாவில் நடனப் பெண்ணாக இருப்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு காரணமாக தெலுங்கு, தமிழ் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மலையாளத் திரையுலகத்தில் ஹேமா கமிட்டி ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. தெலுங்குத் திரையுலகத்திலும் அது போன்ற கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என குரல் எழுந்தது. இந்நிலையில் ஜானி மாஸ்டர் பற்றிய புகார் தெலுங்குத் திரையுலகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேர்ந்த ஜானி மாஸ்டர் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.