ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் பிரித்விராஜ் கடந்த இரண்டு வருடங்களாகவே தனது திரையுலக பயணத்தில் ஏறுமுகத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான குருவாயூர் அம்பலநடையில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது மோகன்லால் நடிப்பில் மூன்றாவது முறையாக லூசிபர்-2 இரண்டாம் பாகமாக உருவாகும் 'எம்பிரான்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் வில்லனாக நடிப்பதற்கு மலையாளத்தில் அவர் கதாநாயகனாக நடிப்பதை விட சில மடங்கு அதிகமாகவே ஊதியம் பெறுகிறார்.
இந்த நிலையில் மும்பையில் வீடு வாங்க வேண்டும் என்கிற தனது ஆசையையும் தற்போது நிறைவேற்றிக் கொண்டுள்ளார் பிரித்விராஜ். மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் 30 கோடி மதிப்பிலான ஒரு புதிய வீட்டை சமீபத்தில் வாங்கியுள்ளார் பிரித்விராஜ் இதற்கான முத்திரை கட்டணமாகவே 1.84 கோடி அவர் செலுத்தியுள்ளார். மும்பையில் அதிக பட வாய்ப்புகள் வருவதாலும் தன்னுடைய படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி நடப்பதாலும் தனக்கு அங்கே ஒரு வீடு இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பிரித்விராஜ் இந்த வீட்டை வாங்கி இருப்பதாக தெரிகிறது.