தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகர் பிரித்விராஜ் கடந்த இரண்டு வருடங்களாகவே தனது திரையுலக பயணத்தில் ஏறுமுகத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான குருவாயூர் அம்பலநடையில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது மோகன்லால் நடிப்பில் மூன்றாவது முறையாக லூசிபர்-2 இரண்டாம் பாகமாக உருவாகும் 'எம்பிரான்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் வில்லனாக நடிப்பதற்கு மலையாளத்தில் அவர் கதாநாயகனாக நடிப்பதை விட சில மடங்கு அதிகமாகவே ஊதியம் பெறுகிறார்.
இந்த நிலையில் மும்பையில் வீடு வாங்க வேண்டும் என்கிற தனது ஆசையையும் தற்போது நிறைவேற்றிக் கொண்டுள்ளார் பிரித்விராஜ். மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் 30 கோடி மதிப்பிலான ஒரு புதிய வீட்டை சமீபத்தில் வாங்கியுள்ளார் பிரித்விராஜ் இதற்கான முத்திரை கட்டணமாகவே 1.84 கோடி அவர் செலுத்தியுள்ளார். மும்பையில் அதிக பட வாய்ப்புகள் வருவதாலும் தன்னுடைய படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி நடப்பதாலும் தனக்கு அங்கே ஒரு வீடு இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பிரித்விராஜ் இந்த வீட்டை வாங்கி இருப்பதாக தெரிகிறது.