ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ், தெலுங்கு சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால் கடந்த ஏழு வருடங்களில் 'பாகமதி, சைலன்ஸ், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' ஆகிய மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக உடல் எடையைக் கூட்டிய பின் அதை அவரால் மீண்டும் குறைக்க முடியவில்லை என்று சொல்லப்பட்டது. 'பாகுபலி 2' படத்தில் கூட கிராபிக்ஸ் மூலம் அவரது தோற்றத்தை சரி செய்தார்கள் என்றும் சொன்னார்கள்.
தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கிரிஷ் இயக்கத்தில் 'காட்டி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் அனுஷ்கா. கடந்த மார்ச் மாதம் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதற்கு முன்பாகவே ஜனவரி மாதத்தில் சில நாட்கள் மட்டும் நடந்த படப்பிடிப்பு அத்துடன் நிறுத்தப்பட்டது. தற்போது ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்களாம். ஆந்திரா, ஒடிஷா எல்லையில் கஞ்சா கடத்தல் பற்றிய கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்பது தகவல். 'வேதம்' படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளியில் மீண்டும் இணைகிறது கிரிஷ் - அனுஷ்கா கூட்டணி.