இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ், தெலுங்கு சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால் கடந்த ஏழு வருடங்களில் 'பாகமதி, சைலன்ஸ், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' ஆகிய மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக உடல் எடையைக் கூட்டிய பின் அதை அவரால் மீண்டும் குறைக்க முடியவில்லை என்று சொல்லப்பட்டது. 'பாகுபலி 2' படத்தில் கூட கிராபிக்ஸ் மூலம் அவரது தோற்றத்தை சரி செய்தார்கள் என்றும் சொன்னார்கள்.
தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கிரிஷ் இயக்கத்தில் 'காட்டி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் அனுஷ்கா. கடந்த மார்ச் மாதம் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதற்கு முன்பாகவே ஜனவரி மாதத்தில் சில நாட்கள் மட்டும் நடந்த படப்பிடிப்பு அத்துடன் நிறுத்தப்பட்டது. தற்போது ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்களாம். ஆந்திரா, ஒடிஷா எல்லையில் கஞ்சா கடத்தல் பற்றிய கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்பது தகவல். 'வேதம்' படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளியில் மீண்டும் இணைகிறது கிரிஷ் - அனுஷ்கா கூட்டணி.