அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
தமிழ் சினிமா உலகில் கடந்த ஓரிரு வாரங்களாக, ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியின் பிரிவு விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயம் ரவி தன் பிரிவு பற்றி ஒரு அறிக்கை வெளியிட, அதற்கடுத்து அவரது மனைவி ஆர்த்தியும் ஒரு அறிக்கை வெளியிட சமூக வலைத்தளங்களில் இதைப் பற்றிப் பலரும் பலவிதமாகக் கமெண்ட் செய்து வந்தார்கள்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு 'பிரதர்' படத்திற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சில விவரங்களையும் பகிர்ந்து கொண்டார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கின் 'லாகின்' விவரங்கள் கூட தன்னிடம் இல்லை. அதையும் மனைவி வீட்டார்தான் நிர்வகித்து வந்தார்கள் என்பதை மறைமுகமாகத் தெரியப்படுத்தினார்.
கடைசியாக ஆறு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டிருந்த ஜெயம் ரவி, அதன் பின் எந்த பதிவையும் போடவில்லை. தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை அணுகி தன்னுடைய 'லாகின்' விவரங்களைப் பெற்றுள்ளார். இதையடுத்து நேற்று முதல் தனது அடுத்த படமான 'பிரதர்' பற்றிய சில பதிவுகளை அப்டேட் செய்துள்ளார். அந்தப் பதிவுகளிலும் ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவு குறித்து பலரும் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.