திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பின்னணி பாடகி சுசித்ரா அவ்வப்போது சோசியல் மீடியாவில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் குறித்த சர்ச்சை வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதிலும் மறைந்த இயக்குனர் பாலசந்தர் குறித்து அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதையடுத்து பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்தார்கள். அதையடுத்து மணிமேகலை - பிரியங்கா விவகாரத்திலும் சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் சுசித்ரா. அதேபோல் இதற்கு முன்பு மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தியதாகவும், அதில் இளம் பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை உடனடியாக மறுத்திருந்தார் ரீமா கல்லிங்கல். இந்நிலையில் தற்போது அவர் தன்னைப் பற்றி ஆதாரம் இல்லாத பொய்யான செய்திகளை பாடகி சுசித்ரா வெளியிட்டதாக சொல்லி அவர் மீது கொச்சின் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். ஆன்லைன் மூலம் அவர் அளித்த இந்த புகார் மீதான நடவடிக்கையை எடுக்குமாறு எர்ணாகுளம் காவல் உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பாடகி சுசித்ராவை கைது செய்து இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.