தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த 2012ம் ஆண்டில் சுந்தர்.சி இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'கலகலப்பு'. இந்த பாகத்தின் வெற்றிக்குப் பிறகு கடந்த 2018ல் சுந்தர். சி ஜீவா, ஜெய் நடிப்பில் 'கலகலப்பு 2'ம் பாகத்தை இயக்கினார். இப்படத்திற்கு விமர்சனம் முன்ன பின்ன இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
சமீபத்தில் சுந்தர்.சி கலகலப்பு 3ம் பாகத்தை இயக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் சுந்தர். சி தற்போது வடிவேலுவுடன் 'கேங்கர்ஸ்' படத்தினை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை இயக்கவுள்ளார் சுந்தர் சி. இந்த படங்களை முடித்த பிறகு தான் சுந்தர் சி கலகலப்பு 3ம் பாகத்திற்கான பணிகளை தொடங்கவுள்ளார் .இந்த படத்தில் மீண்டும் விமல் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் விமல் உறுதி செய்தார்.