தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள திரையுலகில் பரபரப்பாக ஆரம்பித்த பாலியல் குற்றச்சாட்டுகள் அப்படியே தமிழகத்தில் நுழைந்து தற்போது தெலுங்கு திரை உலகில் மையம் கொண்டுள்ளது. அந்த வகையில் பிரபல நடன இயக்குனர் ஜானி, தனது குழுவில் பணியாற்ற மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்ஸோ சட்டத்திலும் இது தவிர வேறு மூன்று பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே சமயம் ஜானி மாஸ்டரின் மனைவி ஆயிஷா தனது கணவர் ஒரு அப்பாவி என்றும் அவர் விரைவில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை துடைத்தெறிந்து விட்டு வெளியே வருவார் என்றும் கூறியிருந்தார். அது மட்டும் அல்ல, அப்படி அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு பிரிந்து செல்லவும் தயார் என்று சத்தியம் செய்யாத குறையாக பேசி இருந்தார்.
ஆனால் தற்போது இதே வழக்கில் அவரும் விரைவில் கைது செய்யப்பட இருக்கிறார் என்ற ஒரு தகவல் காவல்துறை வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த மைனர் டான்சரை ஜானி மாஸ்டரிடம் இணங்கி செல்லுமாறும் அதன் பிறகு அவரை மதம் மாற்றி ஜானி மாஸ்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் கூறி ஆயிஷா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரும் விரைவில் கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.