தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தை முதலில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் படத்தை டிசம்பர் மாதம் 6ம் தேதி வெளியிடுகிறோம் என தள்ளி வைத்தார்கள்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்படம் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. இயக்குனர் சுகுமார், படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நின்று விட்டது என்றும் செய்திகள் வெளியாகின. அதனால், படம் அடுத்த வருடத்திற்குக் கூட தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது என்றார்கள்.
இதனிடையே, சற்று முன் படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டார்கள். படம் வெளியாக இன்னும் 75 நாட்கள் இருக்கிறது என்பதற்கான அறிவிப்பு அது. இதன் மூலம் பட வெளியீடு குறித்து மீண்டும் உறுதி செய்துள்ளது படக்குழு.