ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சினிமா உலகில் மிகப் பெரிய விருதாக பார்க்கப்படுவது, 'ஆஸ்கர்' விருது. எப்படியாவது இந்திய படம் ஒருமுறையாவது இந்த விருது பெற்று விடாதா என்பதே சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரின் ஏக்கமாக இருந்து வருகிறது. எட்டாக்கனியாக இருந்துவந்த ஆஸ்கர் விருதை ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வென்று இந்திய சினிமா ரசிகர்களின் தாகத்தை தணித்தார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்றார், இசை அமைப்பாளர் கீரவாணி.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய சினிமா கூட்டமைப்பு சார்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வான படங்களில் இருந்து ஒரு படத்தை சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்படும். அந்த வகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் 97வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்திய திரைப்பட கூட்டமைப்பு சார்பாக ஹிந்தியில் வெளியான 'லாப்பட்டா லேடீஸ்' படத்தை அனுப்பியுள்ளதாக அறிவித்துள்ளனர். அத்துடன் மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கொட்டுக்காளி, வாழை, தங்கலான், ஜமா ஆகிய 6 தமிழ் படங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
![]() |