ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படங்களுக்கு இசை அமைப்பதோடு அதில் சம்பாதிக்கும் பணத்தை இசை தொடர்பான, சினிமா தொடர்பான நிறுவனங்கள் தொடங்கி முதலீடு செய்து வருகிறார். ஏற்கெனவே இசை பள்ளி நடத்தி வரும் ஏ.ஆர்.ரஹ்மான், கோடம்பாக்கத்திலும், புறநகரிலும் நவீன ஒலிப்பதிவு ஸ்டூடியோக்களை கட்டி உள்ளார். மும்பை மற்றும் லண்டனிலும் ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டூடியோக்கள் உள்ளன.
சென்னை கும்பிடிபூண்டி அருகே உள்ள கவரப்பேட்டையில் ஏஆர்ஆர் பிலிம் சிட்டியை அமைத்துள்ளார். அங்கு தற்போது விர்சுவல் (மெய்நிகர்) எனப்படும் நவீன தொழில்நுட்பத்தில் படத்தை உருவாக்கும் 'யூஎஸ் ட்ரீம்' என்ற நவீன இசை தயாரிப்பு கூடத்தை திறந்துள்ளார். இதன் திறப்பு விழாவில் இயக்குனர்கள் மணிரத்னம், சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் நிருபர்களிடம் கூறும்போது 'ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் ஆந்திரா, மும்பை ஆகிய இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை. ரயில் நிலையம், கோயில் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பிற்காக நீண்டநாட்கள் அனுமதி கிடைக்காத பட்சத்தில் அங்கு ஓரிருநாள் படப்பிடிப்பு நடத்திய பிறகு, பிரத்யேக தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எஞ்சிய படப்பிடிப்பை இந்த ஸ்டுடியோவில் முடித்து கொள்ளலாம்”என்றார்.