மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

தெலுங்கு திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் பயணித்து வருபவர் நடிகர் மோகன்பாபு. இவருக்கு ஜலபள்ளி என்கிற கிராமத்தில் சொந்த வீடு இருக்கிறது. கடந்த 22ம் தேதி மோகன்பாபுவின் செகரட்டரி திருப்பதியில் இருந்து தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்த வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த 10 லட்சம் ரூபாய் தொகையை அங்கிருந்து அறை ஒன்றில் வைத்துள்ளார். ஆனால் மறுநாள் காலை பார்க்கும்போது அவருடைய அறையில் இருந்து அந்த பணம் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவர் போலீசாரிடம் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அங்கே பணியாற்றிய கணேஷ் நாயக் என்கிற பணியாளரின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு இடம் அளிப்பதாக உணர்ந்தனர். மேலும் சில ஆதாரங்களை திரட்டி அவரை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார் திருப்பதியில் வைத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7.3 லட்சம் ரூபாய் தொகையையும் கைப்பற்றினர். மோகன்பாபு வீட்டில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.