சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய, நடிகர் ரஜினி விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ஆன்மிகவாதியாக திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ரஜினியிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'ஸாரி நோ கமென்ட்ஸ்' எனக் கூறி கருத்து கூறுவதை தவிர்த்தார் ரஜினி.
மேலும் அவர், 'தர்பாருக்கு பிறகு போலீசாக நடித்தது வித்தியாசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தர்பார் போன்று வேட்டையன் இருக்காது, வித்தியாசமாக இருக்கும். வேட்டையன் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அவை அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்றார் ரஜினி.
சினிமாவில் 50 ஆண்டுகளை எட்டியுள்ளீர்கள். உங்களை மாதிரி திரைத்துறைக்கு வர நினைக்கும் இளைஞர்களுக்கு உங்கள் அனுபவத்தில் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ' இது ரொம்ப பெரிய கேள்விங்க. வணக்கம், வணக்கம், நன்றி' என நடிகர் ரஜினி பதில் அளித்தார்.