ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா என்ற படம் நேற்று திரைக்கு வந்தது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் கிடா வெட்டி அந்த ரத்தத்தை ஜூனியர் என்டிஆரின் போஸ்டர்கள், கட் அவுட்டுகளில் அபிஷேகம் செய்துள்ளார்கள். இது குறித்த வீடியோக்கள் வெளியானதை அடுத்து ரசிகர்களின் இந்த செயல்பாட்டை நடிகை வேதிகா கடுமையாக கண்டித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இது மிகவும் கொடுமையான செயல். அந்த பாவப்பட்ட குழந்தைக்காக என்னுடைய இதயம் ரத்தம் சிந்துகிறது. இதுபோன்ற சித்ரவதை கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது. குரலற்ற அப்பாவி ஜீவனை இப்படியா வதைப்பது? அந்த அப்பாவிக்காக நான் பிரார்த்திக்கிறேன். அது இறைவனின் கைகளில் தஞ்சம் அடையட்டும். ரசிகர்கள் கொண்டாட்டம் என்பதின் பேரில் இனிமேலும் இதுபோன்று எந்த ஜீவன்களையும் கொல்ல வேண்டாம். தயவு செய்து இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்'' என்று தெரிவித்து இருக்கிறார் வேதிகா.