மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. தான் இயக்கிய நான்காவது படமான 'மங்காத்தா' படம் அஜித்துக்கே ஒரு திருப்புமுனையைத் தந்தவர் வெங்கட் பிரபு.
விஜய்யுடன் முதல் முறையாக இணைந்த 'தி கோட்' படத்திற்கான அறிவிப்பு வந்த போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். 'மங்காத்தா' போல ஒரு அதிரடி ஆக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களக்கு அதைவிட சற்றே குறைந்த ஒரு கமர்ஷியல் படமாகத்தான் 'தி கோட்' படத்தைக் கொடுத்தார்.
இன்றுடன் இப்படம் 25வது நாளை நிறைவு செய்கிறது. அதற்காக “கடவுள் கருணையானவர், எங்களது 'கோட்' படத்தை மெகா பிளாக்பஸ்டர் படமாகக் கொடுத்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.