சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரபல பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி பிரமுகருமான கோவிந்தா இன்று (அக்.,1) அதிகாலை 4:45 மணியளவில் வீட்டில் இருந்தபோது தவறுதலாக காலில் சுட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில், எதிர்பாராத விதமாக காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், காலில் இருந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவரது மேலாளர் சுஷி சின்ஹா கூறுகையில், ''இன்று கோல்கட்டா செல்வதற்காக கோவிந்தா தயாராகி கொண்டிருந்தார். அவரிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்தது. அப்போது அதிலிருந்த குண்டு கோவிந்தாவின் காலில் பாய்ந்தது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. தற்போது உடல் நலத்துடன் இருக்கிறார்'' என்றார்.