தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் இன்று ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. இப்படம் தியேட்டர்களில் வெளியான போது கிளைமாக்ஸ் காட்சிகளில் குழப்பம் உள்ளது என்ற விமர்சனம் எழுந்தது. எந்த விஜய் 'குளோன்' என்பது பலருக்கும் புரியவில்லை. அந்த விமர்சனங்களைத் தொடர்ந்து அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, ''சில காட்சிகளை நீளம் காரணமாக வெட்டி எறிந்துவிட்டோம். தியேட்டர்களில் 3 மணி நேரமாக வெளியான படம், ஓடிடி தளத்தில் வெளியாகும் போது 3 மணி நேரம் 40 நிமிடங்களாக வரும்'' என்று தெரிவித்திருந்திருந்தார். ஆனால், ஓடிடி தளத்தில் தியேட்டர்களில் வெளியான அதே 3 மணி நேரப் படம்தான் வெளியாகி உள்ளது.
இது குறித்து வெங்கட் பிரபு, “டைரக்டர்ஸ் கட்' வர வேண்டும் என்றால் 'லோட்டா விஎப்எக்ஸ்' நிறுவனத்திடமிருந்து முடிவுற்ற பிரதியைப் பெற வேண்டும். அவற்றை டெலிட்டட் காட்சிகளாகவோ அல்லது பிறகு ஓடிடி தளத்தில் சேர்க்கவோ இது குறித்து என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திடம் பேசுகிறேன். இப்போதைக்கு இந்தப் பதிப்பை என்ஜாய் செய்யுங்கள்,” என்று கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு முன்னர் குறிப்பிட்டது போல கூடுதலான அந்த 40 நிமிடக் காட்சிகளை விஎப்எக்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற தயாரிப்பு நிறுவனம்தான் முடிவு செய்ய வேண்டும். அதன் வேலை முடிந்ததா இல்லையா என்பதை தயாரிப்பு நிறுவனம்தான் சொல்ல வேண்டும். அதற்கு கூடுதல் செலவு ஆகும் என்றால் அதைத் தயாரிப்பு நிறுவனம் செய்யுமா என்பதும் கேள்விக்குரியது.
படம் வெளியான போது ரசிகர்களை சமாளித்த வெங்கட் பிரபு, இப்போது மீண்டும் ஒரு காரணத்தை சொல்லி சமாளிப்பது விஜய் ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.