இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா இருவரது விவாகரத்துக்குக் காரணம் தெலுங்கானாவின் முன்னாள் அமைச்சர் கேடிஆர் (முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகன்) என, தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் பெண் அமைச்சரான கொன்ட சுரேகா நேற்று (அக்.,2) ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார்.
பல நடிகைகள் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகியதற்கு கேடிஆர் தான் காரணம் என்றும் மேலும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அமைச்சர் சுரேகா அப்படி பேசிய சில மணி நேரங்களிலேயே சமந்தா, நாகசைதன்யா மற்றும் நாகார்ஜுனா, அமலா, அவர்களது மகன் அகில் என நாகசைதன்யா குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் சில தெலுங்கு சினிமா பிரபலங்களும் அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
திரையுலகினரது தனிப்பட்ட விவகாரத்தை அரசியலாக்கிப் பேசுவது தவறு என்றும் சுட்டிக்காட்டினர். மேலும் தெலுங்கானா காங்கிரஸ் முதல்வரும், காங்., எம்.பி., ராகுல் ஆகியோரும் உடனடியாக பெண் அமைச்சர் சுரேகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.