தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் ஜானி. சிறந்த நடன அமைப்பிற்காக தேசிய விருது பெறப்போகிறவர். இவர் மீது இவரது 21 வயது பெண் உதவியாளர் பாலியல் புகார் அளித்தார். இதை தொடர்ந்து ஜானி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொரடப்பட்டது. ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜானி தனக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கோரி ரங்கா ரெட்டி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். டில்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் விருதுபெற தனக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ஜானிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் வருகிற 6ம் தேதியில் இருந்து 10ந்தேதிவரை ஜானிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
வருகிற 8ந்தேதி டெல்லியில் ஜானி சிறந்த நடன இயக்குனர் விருது பெற இருக்கிறார் ஜானி. தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக ஜானிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த விருதை பெறுவதற்காகவே அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.