ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு மேத்தாவிற்கு சென்னை, தலைமை செயலகத்தில் கலைஞர் நினைவு வித்தகர் விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
பின்னணி பாடகி பி.சுசிலா, ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில், 1935 நவம்பர், 13ல் பிறந்தவர். 70 ஆண்டுகளுக்கும் மேலான தன் இசைப் பயணத்தில், 25,000க்கும் மேற்பட்ட, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடி சாதனைகள் படைத்தவர். தமிழக அரசு மற்றும் மத்திய அரசு விருதுகளை, பலமுறை பெற்றுள்ளார். இந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையில் பாடல்களை பாடியதற்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
அதேப்போல் கவிஞர் முகமது மேத்தா, பெரியகுளத்தில் 1945 செப்., 5ல் பிறந்தவர். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல நுால்களை படைத்ததுடன், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார். 'சாகித்ய அகாடமி' விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
கலைத்துறையில் இவர்களது சேவையை பாராட்டி கலைஞர் நினைவு வித்தகர் விருது வழங்குவதாக தமிழக அரசு கடந்தவாரம் அறிவித்தது. இந்நிலையில் சென்னை, தலைமை செயலகத்தில் பி.சுசீலா, மு.மேத்தாவுக்கு இன்று(அக்., 4) இந்த விருதினை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.