தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா, ஹிந்தியிலும் நடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மும்பை சென்று செட்டிலானார் என்று சொல்லப்பட்டது. அங்கு இருந்தால்தான் வாய்ப்புகளைப் பெற முடியும் என மனைவி ஜோதிகாவின் ஆலோசனையைக் கேட்டுத்தான் சென்னையை விட்டு மும்பைக்குப் போனார் என்பது கோலிவுட் தகவல்.
அவர் அங்கு செட்டிலான பின்பு பாலிவுட்டின் பிரபல இயக்குனரான ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் 'கர்ணா' படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களாக தகவலாகவே இருக்கும் அப்படத்தின் அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அப்படம் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார் ஓம்பிரகாஷ்.
'கர்ணா' படத்தில் சூர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், தற்போது படத்தின் முன்தயாரிப்புப் பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அந்தப் பணிகளை அவர் முடித்த பின் அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.