ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா, ஹிந்தியிலும் நடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மும்பை சென்று செட்டிலானார் என்று சொல்லப்பட்டது. அங்கு இருந்தால்தான் வாய்ப்புகளைப் பெற முடியும் என மனைவி ஜோதிகாவின் ஆலோசனையைக் கேட்டுத்தான் சென்னையை விட்டு மும்பைக்குப் போனார் என்பது கோலிவுட் தகவல்.
அவர் அங்கு செட்டிலான பின்பு பாலிவுட்டின் பிரபல இயக்குனரான ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் 'கர்ணா' படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களாக தகவலாகவே இருக்கும் அப்படத்தின் அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அப்படம் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார் ஓம்பிரகாஷ்.
'கர்ணா' படத்தில் சூர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், தற்போது படத்தின் முன்தயாரிப்புப் பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அந்தப் பணிகளை அவர் முடித்த பின் அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.