அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அவருடன் நடித்தவர் அண்ணன் சக்கரபாணி. தம்பியின் உயர்வு ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தவர். எம்.ஜி.ஆரும் தன் தாய்க்கு பிறகு அண்ணனைத்தான் தெய்வமாக வணங்கினார். பின்னாளில் எம்.ஜி.ஆர் பெரிய நட்சத்திரமாக மாறியபோதும் எல்லா வரவு செலவுகளையும் பார்த்துக் கொண்டவர் சக்கரபாணி. இதனால் சினிமாவில் சக்கரபாணியை 'பெரியவர்' என்றும் எம்ஜிஆரை 'சின்னவர்' என்றும் அழைப்பார்கள்.
இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். ஆரம்ப கால கட்டத்தில் இருவரும் சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் முழுமையான கேரக்டராக இணைந்து நடித்தது 'இரு சகோதரர்கள்' படத்தில்தான். இந்த படத்தில் எம்.ஜி.ஆர், டி.எஸ்.பாலையாவின் நண்பராக நடித்தார். சக்கரபாணி போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
1936ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கினார், கே.பி.கேசவன், கே.கே.பெருமாள், டி.எஸ்.பாலையா, எஸ்.என்.விஜயலட்சுமி, ராஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கூட்டுக் குடும்பத்தில் அண்ணன், தம்பிகளுக்கு இடையில் வரும் மோதலும், கூடலும்தான் கதை.