ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் கதாநாயகன் சிரஞ்சீவி. அவருக்கு ஹைதராபாத்தில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் 25 ஆயிரம் அடியில் பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. அங்குதான் அவர் வசித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்புதான் அந்த வீடு கட்டப்பட்டது.
பெங்களூரூ கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே அவருக்குச் சொந்தமான பார்ம் ஹவுஸ் ஒன்றும் உள்ளது. அவரது குடும்பத்தினர், சகோதரர் குடும்பத்தினர் சில விசேஷமான நாட்களில் அந்த வீட்டிற்குச் செல்வார்கள். சென்னையிலும் சிரஞ்சீவிக்கு வீடு ஒன்று உள்ளது. தெலுங்குத் திரையுலகம் ஹைதராபாத் செல்வது வரை அந்த வீட்டில்தான் அவர் வசித்து வந்தார்.
தற்போது தமிழகத்தில் உள்ள மலைவாசஸ்தலமான ஊட்டியில் 6 ஏக்கர் இடம் ஒன்றை சுமார் 16 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த இடத்தில் பார்ம் ஹவுஸ் ஒன்றைக் கட்ட உள்ளாராம். சமீபத்தில் அவரது மகனும் நடிகருமான ராம் சரண், அவரது மனைவி உபாசானா ஆகியோர் அங்கு சென்று ஆலோசனை மேற்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
சிரஞ்சீவியின் பல தெலுங்குப் படங்களில் ஊட்டி தவறாமல் இடம் பெற்றதுண்டு. அந்தக் காலத்திய படங்களில் அவரது பாடல் காட்சிகள் பலவும் அங்குதான் படமாக்கப்பட்டுள்ளது. அதனால், சிரஞ்சீவிக்கு ஊட்டி மீது தனி பாசம் என்கிறார்கள்.