தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் கதாநாயகன் சிரஞ்சீவி. அவருக்கு ஹைதராபாத்தில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் 25 ஆயிரம் அடியில் பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. அங்குதான் அவர் வசித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்புதான் அந்த வீடு கட்டப்பட்டது.
பெங்களூரூ கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே அவருக்குச் சொந்தமான பார்ம் ஹவுஸ் ஒன்றும் உள்ளது. அவரது குடும்பத்தினர், சகோதரர் குடும்பத்தினர் சில விசேஷமான நாட்களில் அந்த வீட்டிற்குச் செல்வார்கள். சென்னையிலும் சிரஞ்சீவிக்கு வீடு ஒன்று உள்ளது. தெலுங்குத் திரையுலகம் ஹைதராபாத் செல்வது வரை அந்த வீட்டில்தான் அவர் வசித்து வந்தார்.
தற்போது தமிழகத்தில் உள்ள மலைவாசஸ்தலமான ஊட்டியில் 6 ஏக்கர் இடம் ஒன்றை சுமார் 16 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த இடத்தில் பார்ம் ஹவுஸ் ஒன்றைக் கட்ட உள்ளாராம். சமீபத்தில் அவரது மகனும் நடிகருமான ராம் சரண், அவரது மனைவி உபாசானா ஆகியோர் அங்கு சென்று ஆலோசனை மேற்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
சிரஞ்சீவியின் பல தெலுங்குப் படங்களில் ஊட்டி தவறாமல் இடம் பெற்றதுண்டு. அந்தக் காலத்திய படங்களில் அவரது பாடல் காட்சிகள் பலவும் அங்குதான் படமாக்கப்பட்டுள்ளது. அதனால், சிரஞ்சீவிக்கு ஊட்டி மீது தனி பாசம் என்கிறார்கள்.