இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை நயன்தாரா மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்தவர் என்றாலும், அவர் மலையாள படங்களில் குறைந்த அளவிலேயே நடித்து வருகிறார். தமிழில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வரும் அவர், மலையாளத்தில் கடந்த 2019ல் 'லவ் ஆக்சன் டிராமா' என்கிற படத்தில் நடித்து மீண்டும் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஐந்து வருடங்களுக்குள் 'நிழல், கோல்டு' என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்று வருட இடைவெளிக்கு பிறகு 'டியர் ஸ்டூடன்ட்ஸ்' என்கிற மலையாள படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. லவ் ஆக்சன் டிராமா படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகர் நிவின்பாலி. சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் ராய் இருவரும் இணைந்து இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டுள்ளதையும் வித்யா ருத்ரன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதையும் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக அறிவித்துள்ளார் நயன்தாரா.