திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான கோட் திரைப்படம் ஓரளவுக்கு வெற்றி படமாகவே அமைந்தது என்றாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவரும் அளவிற்கு அந்த படம் அமையவில்லை என்கிற கருத்தும் பரவலாக இருக்கிறது. படமும் விஜய்யின் முந்தைய லியோ படத்தின் வசூலையே தாண்டவில்லை. இதற்கு படத்தின் கதையும் விஜய்யின் கதாபாத்திரங்களும் மற்றும் அவரது உருவத்தோற்றங்களும் கூட மைனஸ் பாயிண்ட்களாக இருந்தன என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இப்படி ஒரு கதை அம்சத்துடன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பே விஜயகாந்த் நடிப்பில் ராஜதுரை என்கிற படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்கியவர் வேறு யாருமில்லை. சாட்சாத் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான்.
இதுகுறித்து இயக்குநர் வெங்கட்பிரபு கூறும்போது, “இப்படி ஒரு படம் வந்திருக்கும் தகவலை கோட் படம் வெளியான பிறகு பலரும் படம் பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தபோது தான் எனக்கே தெரிய வந்தது. இதுபோன்று தந்தைக்கு எதிரான மகன் என்கிற கரு உலகம் முழுமைக்கும் பொதுவான ஒன்று. அதனால் பல வெளிநாட்டு படங்களில் சொல்லப்பட்ட விஷயங்களை பார்த்தோமே தவிர இங்கே நம் ஊரிலேயே எடுக்கப்பட்ட ராஜதுரை பார்க்காமல் விட்டு விட்டோம். அதை பார்த்து இருந்தால் கோட் படத்தில் சில விஷயங்களை மாற்றி இன்னும் கொஞ்சம் பெட்டராக கொடுத்திருப்போம்” என்று கூறியுள்ளார்.