தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் மீடியாக்களில் பரபரப்பாக வலம் வர ஆரம்பித்துள்ளார் நடிகர் ராணா டகுபதி. இன்னொரு பக்கம் ஹிந்தியில் ஆலியா பட் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான ஜிக்ரா திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை ராணா தான் பெற்றிருந்தார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்வுகளை தடபுடலாகவும் நடத்தினார் ராணா. அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இது அவர் ராணாவின் மீது கொண்ட அன்பு காரணமாகத்தான்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த சமந்தாவை ராணா அன்பாக அரவணைத்து அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் தங்களது அன்பான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ராணாவின் திருமணத்தின் போது நடிகை சமந்தா ஒரு சகோதரியாக நின்று அந்த திருமணத்தில் செய்ய வேண்டிய வேலைகளை கவனித்தார் என்றும், தொடர்ந்து ராணா வெளியிடும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு தனது பங்களிப்பை தந்து வருகிறார் என்றும் இது போன்று ஒரு சகோதரியைப் பெற ராணா நிச்சயம் தகுதியானவர் என்றும் இவர்களது சகோதரத்துவத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.