குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. வெளியான தினத்தில் இருந்தே பாசிடிவான விமர்சனங்களை பெற்று ஒரு வெற்றிப் படமாக மாறியுள்ளது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் ரஜினிக்கு அடுத்தபடியாக அனைவரையும் கவர்ந்தவர் என்றால் அது பஹத் பாசில் தான். படம் பார்த்து விட்டு வரும் அனைவருமே தவறாமல் பஹத்தின் நடிப்பு பற்றி குறிப்பிட்டு பாராட்டி வருகிறார்கள். ரஜினிக்கும் அவருக்குமான காட்சிகள் அனைத்துமே நகைச்சுவையாகவும் போரடிக்காத விதமாகவும் உருவாக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இந்த படத்தில் நீளம் காரணமாக தூக்கப்பட்ட, தியேட்டரில் இடம் பெறாத பஹத் பாசில் நடித்த காட்சி ஒன்றை தயாரிப்பு நிறுவனம் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளது. அதில் போலீஸ் அதிகாரியான ரித்திகா சிங்கிடம் சாப்பாடு ஆர்டர் பண்ணுங்க மேடம் என பஹத் சொல்ல, இந்த சூழலில் உனக்கு மட்டும் எப்படி பசிக்குது என பதிலுக்கு கோபமாக கேட்கிறார் ரித்திகா சிங். அதற்கு, “மேடம் இந்த பசி, பட்டினி, தூக்கம், இருமல், விக்கல், பணம் இதெல்லாம் எப்ப வரும்னு தெரியாது எப்ப போகும்னும் தெரியாது.. எச்சச்ச எச்சச்ச கெச்சச்ச கெச்சச்ச” என்று முத்து படத்தில் ரஜினி பேசி ஹிட்டான வசனத்தை ரித்திகாவிற்கு பதிலாக கொடுக்கிறார் பஹத் பாசில்.
இந்த காட்சியை இப்போது பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள் பலரும், இதை படத்தில் வைத்திருந்தால் தியேட்டரில் விசில் பறந்திருக்குமே இதை ஏனய்யா நீக்கினீர்கள் என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.