ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷ் தற்போது பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனிபர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக விகாஸ் சம்பத் நடித்து வருகிறார். சீரியலில் ஜோடியாக திரியும் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில், திவ்யா கணேஷ் இது முற்றிலும் பொய்யான செய்தி என்று கூறியதோடு, 'எங்கள் இருவருக்கும் குடும்பங்கள் இருக்கிறது. எங்கள் குடும்பங்களை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறான பொய் செய்திகளை பரப்புவதை முதலில் நிறுத்துங்கள். எனது கடந்த கால வாழ்க்கை குறித்தும் பேசாதீர்கள். அதை நான் மறக்கவே நினைக்கிறேன். இதை எனது வேண்டுகோளாக நினைத்து ரீச்சிற்காகவும், வியூஸ்காகவும் இது போன்ற போலியான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்' என வேண்டுகோள் வைத்துள்ளார்.