ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவை கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அவர் தெலுங்கில் நடித்து வெளிவந்த மகாநடி, சீதாராமம், லக்கி பாஸ்கர் ஆகிய படங்களும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் இவரை வைத்து தெலுங்கில் படங்களை உருவாக்க தெலுங்கு பட நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது புதிதாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் துல்கர் சல்மான். இதனை கல்கி படத்தை தயாரித்த வைஜயந்தி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு ' ஆகாசம் லோ ஒக்க தாரா' என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சாய் பல்லவி இணைந்து நடிக்கவுள்ளார். இவர்கள் ஏற்கனவே 'காளி' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.