உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் |

நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவை கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அவர் தெலுங்கில் நடித்து வெளிவந்த மகாநடி, சீதாராமம், லக்கி பாஸ்கர் ஆகிய படங்களும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் இவரை வைத்து தெலுங்கில் படங்களை உருவாக்க தெலுங்கு பட நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது புதிதாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் துல்கர் சல்மான். இதனை கல்கி படத்தை தயாரித்த வைஜயந்தி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு ' ஆகாசம் லோ ஒக்க தாரா' என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சாய் பல்லவி இணைந்து நடிக்கவுள்ளார். இவர்கள் ஏற்கனவே 'காளி' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.