வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் தற்போது 'செவ்வந்தி' தொடரில் நடித்து வருகிறார். இவரது கணவர் அர்னவ் இவருக்கு துரோகம் செய்துவிட்டு அன்ஷிதா என்ற சக நடிகையுடன் சுற்றி வருவதாக திவ்யா ஸ்ரீதர் புகார் செய்திருந்தார். இந்த பிரச்னை அப்படியே இருக்க அர்னவ் அன்ஷிதாவுடன் ஜோடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று, பின் கடந்த வாரத்தில் எவிக்ட் ஆகி வெளியேறியிருந்தார். இதனையடுத்து திவ்யா ஸ்ரீதர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த திவ்யா ஸ்ரீதர், 'சிலர் அர்னவ்வை எனது முன்னாள் கணவர் என்று சொல்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை. எங்களுக்கு இன்னும் சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை. நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். சிங்கிள் மதரா என் குழந்தைகளை வளர்க்க ரொம்பவே கஷ்டப்படுறேன். செவ்வந்தி டீம் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருக்காங்க. இப்ப நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். நான் பிக்பாஸ் போறதா சிலர் சொல்றாங்க. என்னால் என் குழந்தைகளை பிரிஞ்சு இருக்க முடியாது. அதனால நான் பிக்பாஸ் வீட்டுக்கு போகல. நீங்க எல்லாரும் எனக்கு உறுதுணையா பக்கபலமா இருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நன்றி. உங்க எல்லாத்துக்கும் நான் கொடுக்கிற அட்வைஸ் ஒண்ணு தான் யாரையும் நம்பாதீங்க' என அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.