தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

10 ஆண்டுகளுக்கு முன்பு மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வெளியாக இருந்த நிலையில் படத்தை வெளியிட தடை கோரி பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 'இரண்டாம் குத்து' படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் (பிசாசு 2 தயாரிப்பாளர்) பாக்கி வைத்திருந்தது. ஐகோர்ட் உத்தரவுப்படி இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர், ஒரு கோடியே 17 லட்சம் மற்றும் ஜி.எஸ்.டி. தொகை 31 லட்சம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டும் பணத்தை தரவில்லை. எனவே, பிசாசு-2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'பிசாசு-2' திரைப்படத்தை வெளியிட தடை விதித்தது. மேலும், இந்த மனு தொடர்பாக ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்தது.