இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ரஜினிக்கு மிகவும் பிடித்த இயக்குனர் மகேந்திரன், அவருக்கு பிடித்த படம் 'முள்ளும் மலரும்'. ஆனால் இந்த இரண்டுமே கமல்ஹாசன் இல்லை என்றால் சாத்தியமில்லை. திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்த மகேந்திரன் முதன் முதலில் இயக்கிய படம் 'முள்ளும் மலரும்'. ரஜினிகாந்த், ஷோபா, படாபட் ஜெயலட்சுமி நடித்திருந்தனர். பாலுமேகந்திரா ஒளிப்பதிவு, இளையராஜா இசை, ஆனந்தி பிலிம்ஸ் தயாரிப்பு.
இந்த படத்தின் பணிகள் 80 சதவிகிதம் முடிவடைந்திருந்த நிலையில் படத்தின் பணிகள் நின்று போனது. காரணம் தயாரிப்பாளருக்கு இருந்த பண நெருக்கடி. இதனால் இனிமேல் என்னால் செலவு செய்ய முடியாது என்று கூறி தயாரிப்பாளர் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டார். 'செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல்' பாடலும் இன்னும் சில காட்சிகளும் படமாக்கப்பட வேண்டியது இருந்தது. ரஜினி அப்போது பிசியாக இருந்ததால் இந்த படத்தை விட்டுவிட்டு மற்ற படங்களில் கவனம் செலுத்தினார். அவர் சம்பந்தபட்ட காட்சிகள் எடுக்கப்பட்டும் விட்டது.
இந்த நேரத்தில் இதைப் பற்றி கேள்விப்பட்ட கமல்ஹாசன் அதுவரை எடுக்கப்பட்ட படத்தை பார்த்தார். ஆச்சர்யப்பட்டார். இது சில்வர் ஜூப்ளி படம் இதை ஏன் பாதியில் நிறுத்தி விட்டீர்கள் என்று கோபமடைந்தார். மீதி படத்தை தானே எடுத்து தருவதாக சொல்லி அதற்கான பணத்தை கொடுத்தார். 'முள்ளும் மலரும்' முழுதாக நிறைவடைந்து வெளியாகி கமல் சொன்னது போலவே சில்வர் ஜூப்ளி படமாகவும் அமைந்தது.