சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படத்தை 'பயோபிக் படங்கள்' என்று அழைக்கிறோம். எல்லா நடிகர்களும் ஒரு பயோபிக் படத்திலாவது நடித்திருப்பார்கள் அல்லது நடிக்க முயற்சிப்பார்கள். எம்.ஜி.ஆர் 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்', சிவாஜி 'கப்பலோட்டிய தமிழன்', ரஜினி 'ராகவேந்திரர்', கமல் வரதராஜ முதலியார் (நாயகன்) இப்படி இந்த பட்டியல் நீளமானது. ஆனால் ஒரு நடிகர் பயோபிக் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அவர் 1930 மற்றும் 40களில் வாழ்ந்த தண்டபாணி தேசிகர்.
தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த இவர் முறைப்படி இசை கற்று தமிழ் இசை அறிஞரானார். தேவார பாடல்களை தெருக்களில் பாடி வந்தார். பின்னர் இசை ஆசிரியர் ஆனார். இவரது பாடல்கள் தஞ்சை மண்டலம் முழுவதும் பிரபலமாக இருந்தது. இதை கேள்விப்பட்டு அவரை சென்னைக்கு அழைத்து வந்து 'பட்டினத்தார்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்கள். அவர் படத்தில் பட்டினத்தார் பாடல்களை பாடி நடித்தார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது.
அதன் பிறகு வள்ளாள மகாராஜா, தாயுமானவர், மாணிக்க வாசகர், நந்தனார், திருமழிசை ஆழ்வார் என ஆன்மீக குருக்களின் வாழ்க்கை படத்தில் நடித்தார். பின்னர் சினிமாவை விட்டு விலகிய அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசைத் துறை தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி, மறைந்தார்.