கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரான இந்திரா சவுந்தர்ராஜன் நேற்று மதுரையில் காலமானார். அவருக்கு வயது 65. 700க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 50க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சினிமாவுக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களான மர்மதேசம், மந்திர வாசல், விடாது கருப்பு, ருத்ரவீணை போன்றவற்றின் கதையும், வசனமும் இந்திரா சவுந்தராஜனுடடையது. இது தவிர 'அனந்த புரத்து வீடு', தேசிய விருது பெற்ற 'சிருங்காரம்' படத்திற்கு இவர் வசனம் எழுதினார்.
பல இயக்குனர்கள் இவரை நடிக்க அழைத்தும் அதனை மறுத்து வந்த இந்திரா சவுந்தர்ராஜன் கடந்த ஆண்டு வெளிவந்த 'கட்டில்' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் பழமையான பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் வடநாட்டு வியாபாரியாக நடித்தார். அவர் நடித்த முதலும், கடைசி படமும் அதுதான்.
தான் எழுதிய 'சிவம்' என்ற நாவலை தனுஷ் நடிப்பில் சினிமாவாக்க முயற்சித்தார். இதற்காக சில தயாரிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார், தனுசை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது.