ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரான இந்திரா சவுந்தர்ராஜன் நேற்று மதுரையில் காலமானார். அவருக்கு வயது 65. 700க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 50க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சினிமாவுக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களான மர்மதேசம், மந்திர வாசல், விடாது கருப்பு, ருத்ரவீணை போன்றவற்றின் கதையும், வசனமும் இந்திரா சவுந்தராஜனுடடையது. இது தவிர 'அனந்த புரத்து வீடு', தேசிய விருது பெற்ற 'சிருங்காரம்' படத்திற்கு இவர் வசனம் எழுதினார்.
பல இயக்குனர்கள் இவரை நடிக்க அழைத்தும் அதனை மறுத்து வந்த இந்திரா சவுந்தர்ராஜன் கடந்த ஆண்டு வெளிவந்த 'கட்டில்' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் பழமையான பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் வடநாட்டு வியாபாரியாக நடித்தார். அவர் நடித்த முதலும், கடைசி படமும் அதுதான்.
தான் எழுதிய 'சிவம்' என்ற நாவலை தனுஷ் நடிப்பில் சினிமாவாக்க முயற்சித்தார். இதற்காக சில தயாரிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார், தனுசை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது.