ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு தெலுங்குப் படங்களுக்கு வட இந்திய மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதை 'புஷ்பா 1, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட சில பான் இந்தியா படங்களின் வரவேற்பும், வசூலும் நிரூபித்தது.
தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்தடுத்து இரண்டு பான் இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்', 2025 ஜனவரி 10ம் தேதியும், சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' டிசம்பர் மாதம் 5ம் தேதியும் வெளியாக உள்ளன.
'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்த வாரம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. படத்தில் நடித்துள்ள ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, தயாரிப்பாளர் தில் ராஜு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது 'புஷ்பா 2' படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியும் வட இந்தியாவில் நடத்த உள்ளனர். பீஹார் மாநிலம் பாட்னா நகரில் நவம்பர் 17ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வட இந்திய மாநிலங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் போது அது ஹிந்தி ரசிகர்களிடம் நன்றாக சென்று சேர்கிறது என்பதற்காக இப்படி நடத்துகிறார்கள் என்று டோலிவுட்டில் சொல்கிறார்கள். அது படம் வெளியான பின்பு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துத்தான் உறுதியாகச் சொல்ல முடியும்.