ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இதே நாளில் நீரிழிவு தினமும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நண்பர்களே நான் முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன்.
நீரழிவு மற்றும் உங்கள் கண்கள். நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால் இது ரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல, நீரழிவு நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும். இது கடுமையான பார்வை பிரச்னைகளை ஏற்படுத்தும். குருட்டுத் தன்மையையும் கூட ஏற்படுத்தும். ஆனால் இதோ ஒரு நல்ல செய்தி.
வழக்கமாக கண் பரிசோதனைகள் மூலம் நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையை பாதுகாக்க உதவலாம். நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் அல்லது யாரையாவது அறிந்திருந்தால் உங்கள் பார்வையை பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும். ஒரு எளிய வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். இந்த செய்தியை பரப்பி ஒளிமயமான எதிர்காலத்தை காண அனைவருக்கும் உதவுவோம் நன்றி என அந்த பதிவில் ஏ. ஆர். ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.