பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
பா.ரஞ்சித்தின் உதவியாளர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கும் படம் 'சொர்க்கவாசல்'. இதில் ஆர்ஜே.பாலாஜி, இயக்குநர் செல்வராகவன், பாலாஜி சக்திவேல், நட்டி, கருணாஸ், ஷோபா சக்தி, மியூசிக் டைரக்டர் அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா, மலையாளத்தின் பிரபலமான ஷரத் உதீன், ஹக்கீம் ஷா உள்பட பலர் நடிக்கிறார்கள். மலையாள நடிகை சானியா ஐயப்பன் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மம்மூட்டியின் 'பிரமயுகம்' படத்திற்கு இசையமைத்த கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சித்தார்த் கூறியிருப்பதாவது: இது ஜெயில் வாழ்க்கை பற்றிய கதைதான். ஜெயில் என்பது சமுதாயத்திற்கு விரோதமானது என்ற ஒரு நிலைப்பாட்டை நாம் உருவாக்கி வைத்துள்ளோம். ஜெயில் சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. பல குற்றம் செய்தவர்கள், குற்றமே செய்யாத நிரபராதிகள் ஒன்றாக ஒரே கட்டுப்பாட்டுக்குள் வாழ்கிற இடம். அப்படி வாழ்ந்தவர்களை, வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் நடிக்க வைத்து, அவர்கள் கதையையும் இணைத்து படத்தை உருவாக்கி உள்ளேன்.
ஜெயில் வாழ்க்கை பற்றி 'வடசென்னை', 'விருமாண்டி' படங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த படங்கள் சொல்லாத சில விஷயங்களை இந்த படம் சொல்கிறது. சிறையில் பணியாற்றும், காவலர்களும் சிறை வாழ்க்கைதான் வாழ்கிறார்கள், அவர்களும் அங்கிருந்து வெளியில் வர நினைக்கிறார்கள் என்பதையும் பேசுகிற படம்.
இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி நடிக்கலாம் என்று கருத்து சொன்னது தயாரிப்பாளர்கள்தான். அவர் குடும்ப பாங்கான படங்களில் நடிப்பவர் இதற்கு அவர் செட் ஆவாரா என்ற தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் கதையை கேட்டதும் அந்த கேரக்டராகவே மாறி நின்றார். நிச்சயம் இதில் வேற மாதிரியான பாலாஜியை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.